Site icon Tamil News

அசாமில் 19 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் – 6 பேர் கைது

அசாமில் மூன்று தனித்தனி நடவடிக்கைகளில் ₹ 19 கோடி மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டது மற்றும் 6 பேர் கைது செய்யப்பட்டதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

குறிப்பிட்ட தகவலின் பேரில், காச்சார் மாவட்டத்தில் உள்ள திகர்கல் டோல் கேட்டில் போலீசார் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு 1.881 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்ததாக முதல்வர் ‘x’ தளத்தில் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட ஹெராயினின் மதிப்பு சர்வதேச சந்தையில் 9.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதே மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், போலீசார் சிறப்பு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு, 3 கோடி ரூபாய் மதிப்பிலான 561 கிராம் ஹெராயின் போதைப் பொருளை மீட்டு 2 பேரை கைது செய்தனர்.

கர்பி அங்லான் மாவட்டத்தில் உள்ள போர்பதார் என்ற இடத்தில் ஒரு வாகனத்தை மறித்த போலீசார், ₹7 கோடி மதிப்புள்ள 1.005 கிலோ ஹெராயினை மீட்டு, ஒருவரைக் கைது செய்தனர்.

வெற்றிகரமான நடவடிக்கைகளுக்காக முதல்வர் சர்மா காவல்துறையினரை வாழ்த்தினார்.

Exit mobile version