Site icon Tamil News

நேபாளத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் – விமானி உட்பட ஐவர் பலி!

நேபாளத்தில் நுவாகோட் மாவட்டத்தில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

நேபாளத்தின் நிவாகோட் மாவட்டத்திற்கு உற்பட்ட சிவபுரி பகுதியில் புதன்கிழமை மதியம் ஏற்பட்ட ஏர் டைனாஸ்ட்டி ஹெலிக்காப்டர் விபத்தில் சக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து சியாபுருபென்ஸி செல்லிம் போது ஹெலிக்காப்டர் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கிய ஹெலிக்காப்டர் மூத்த கேப்டனான விமானி அருண் மல்லாவால் இயக்கப்பட்டது. விமானம் பறக்கத்தொடங்கிய 3வது நிமிடத்தில் அலுவலக ஊழியர்களுடனான தகவல் துண்டிக்கப்பட்டது.

விமானத்தில் மொத்தம் 5 பேர் பயணித்ததாகவும் அதில் விமானி மற்றும் சீனத்தை சேர்ந்த 4 பேர் பயணித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவைச் சேர்ந்தவர்கள் ரசூவாவுக்கு ஹெலிக்காப்டரில் சென்றதாகவும் உள்ளூர் செய்திகளில் வெளியாகியுள்ளன.

தளத்தில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் 5 பயணிகளும் விமானியும் விபத்தில் பலியாகியுள்ளனர்.

Exit mobile version