இரண்டு விமானிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் துபாய் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று (07.08) இடம்பெற்றுள்ளது.
காணாமல் போன விமானிகளை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான பெல் 212 ரக ஹெலிகாப்டரின் விமானிகளில் ஒருவர் எகிப்தியர் மற்றவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.