ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2,000 வீடுகள் முழுமையாகவும், மேலும் 4,000 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மேலும், 2000க்கும் மேற்பட்ட கடைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது.
ஹெலிகொப்டரின் உதவியுடன் சடலங்களை மீட்கும் முயற்சியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு குறித்த விமானம் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.