சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 31,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டொக்சுரி புயலால் வடக்கு சீனாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Hebei, Tianjin மற்றும் Shaanxi ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பெய்ஜிங்கில் வெள்ளம் காரணமாக பல சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
பல கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல சுரங்கப் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய பேரழிவு காரணமாக, தலைநகர் பெய்ஜிங்கில் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அமைந்துள்ள பழைய வீடுகளின் பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்து உள்ளது.
மேலும் சில வீடுகளில் வெள்ளத்துடன் கூடிய அடர்ந்த வண்டல் மண் படிந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சீனாவின் அரச செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் கூற்றுப்படி, பெய்ஜிங்கில் பல போக்குவரத்து நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன.
தற்போதைய பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பெய்ஜிங்கில் சில அலுவலக ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.