Site icon Tamil News

பெண்களின் பாதுகாப்பிற்காக ஜப்பானில் கடுமையான முடிவு

பெண்களின் பாதுகாப்பிற்காக ஜப்பான் கடுமையான முடிவை எடுத்துள்ளது.

நாட்டின் பாலியல் குற்றச் சட்டங்களை கடுமையாக்குவதன் மூலம் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பலாத்காரம் என்ற வரையறையை கட்டாயப் பாலுறவில் ஈடுபடுவதிலிருந்து சட்டவிரோதமான பாலுறவுச் செயலாக விரிவுபடுத்த அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஜப்பானும் பாலியல் செயலுக்கு சம்மதிக்கும் வயதை 13ல் இருந்து 16 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது.

ஒரு நபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால், புகார் அளிக்க அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான கால அவகாசத்தை 10-லிருந்து 15 ஆண்டுகளாக அதிகரிக்கவும் செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானில் பாலியல் வன்முறைக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரு பெரிய குரல் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்க ஜப்பான் முடிவு செய்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றியுள்ளது.

இருப்பினும், பாலியல் வன்முறையைத் தடுக்க கடுமையான சட்டங்கள் மட்டும் போதாது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Exit mobile version