Site icon Tamil News

பயிற்சியின் போது காயத்திற்குள்ளான சிறுமிக்கு ஹர்திக் பாண்ட்யா கொடுத்த பரிசு

வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் இடம்பிடித்தது.

மேலும் இந்த போட்டியின் போது நெழிச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.

இந்த போட்டிக்கு முன்பு ஹர்திக் பாண்ட்யா பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் அடித்த பந்து ஒரு சிறுமியை தாக்கியது. உடனே அந்த சிறுமி பிசிசிஐ-ன் மருத்துவ குழுவை அனுகினார்.

பின்னர் அந்த சிறுமியை போட்டி முடியும் வரை காத்திருங்கள் என்று பாண்ட்யா கூறினார்.

பின்னர் போட்டி முடிந்த பிறகு அந்த சிறுமிக்கு அவர் கையெழுத்திட்ட பந்தை அவர் பரிசாக வழங்கினார். அதை வாங்கி கொண்ட சிறுமி மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.

 

Exit mobile version