Site icon Tamil News

எரிபொருளால் பாரிய இலாபத்தை ஈட்டும் அரசாங்கம் : மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி!!

எரிபொருளை விற்பனை செய்வதன் மூலம் அரசாங்கம் பாரிய இலாபத்தை ஈட்டுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான எரிபொருள் விலையை குறைக்கும் திறன் அரசாங்கத்திற்கு இருந்தாலும், ஐஓசி மற்றும் சினோபெக் நிறுவனங்களுக்கு இலாபம் ஈட்டுவதற்காக அரசாங்கம் திட்டமிட்டு எரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இணைய சேனல் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எரிபொருள் விற்பனையால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படும் என பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ள கருத்துக்கள் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version