Site icon Tamil News

இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக கடத்தப்பட்ட தங்கம் : ஒருவர் கைது!

இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்ட தங்க பிஸ்கட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக இடம்பெற்று வரும் மோசடி தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கு கிட்டத்தட்ட 916 தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த அதிகாரிகள் சந்தேக நபருடன் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி இலங்கை நாணயத்தில் 11 கோடியை தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version