Site icon Tamil News

க்ரீஸில் பரவி வரும் goats plague தொற்று : பாலாடை தொழிற்துறையினர் பாதிப்பு!

க்ரீஸில் goats plague வைரஸ் தொற்றால் பெரும்பாலான ஆடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Peste de petits ruminants (PPR) எனப்படும் இந்த நோய் ஆரம்பத்தில் ஜூலை 11 ஆம் திகதி மத்திய கிரீஸின் தெசலியில் கண்டறியப்பட்டது.

இது வேகமாகப் பரவி, பல பண்ணைகளைப் பாதித்து, அண்டை நாடான ருமேனியாவைத் தாக்கி, அங்குள்ள கிட்டத்தட்ட 58,000 செம்மறி ஆடுகள் கொல்லப்பட வழிவகுத்தது.

இந்த நோய் கிரேக்கத்தின் உள்நாட்டு கால்நடைத் தொழில் மற்றும் அதன் புகழ்பெற்ற ஃபெட்டா சீஸ் உற்பத்திக்கு கணிசமான ஆபத்தை ஏற்படுத்துகிறது.

கிரேக்கத்தின் மென்மையான பாலாடைக்கட்டியில் சுமார் 40 சதவீதம் தெசலியில் உள்ள செம்மறி மற்றும் ஆடு பால் உற்பத்தியில் இருந்து வருகிறது, இது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version