Site icon Tamil News

கடிதங்களை கொண்டு செல்ல விமான போக்குவரத்தை நிறுத்தும் ஜெர்மனி!

ஜெர்மனியின் முக்கிய தேசிய அஞ்சல் சேவையானது ஏறக்குறைய 63 ஆண்டுகளுக்குப் பிறகு கடிதங்களைக் கொண்டு செல்ல உள்நாட்டு விமானங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளது.

இது கடித அஞ்சலின் முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு ஜெர்மனிக்கு இடையே கடிதங்களை ஏற்றிச் சென்ற கடைசி விமானங்களாக லுஃப்தான்சா யூனிட் யூரோவிங்ஸ் மற்றும் டுய் ஃப்ளை காணப்படுகிறது.

இனி குறித்த பகுதியூடான கடித விநியோகம் தரைமார்க்கமாக இடம்பெறும் எனவும், கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை 80% க்கும் அதிகமாக குறைக்க நிறுவனம் அனுமதிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

“காலநிலை மாற்றத்தின் காலங்களில், ஜெர்மனியில் உள்ள உள்நாட்டு கடிதங்களுக்கான ஏர்மெயிலை இனி நியாயப்படுத்த முடியாது – மேலும் கடந்த தசாப்தங்களில் கடித அஞ்சலுடன் தொடர்புடைய அதே அவசரம் இனி இல்லை,” என்று தாய் நிறுவனமான DHL குழுமத்தின் ஜெர்மன் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version