ஜெர்மன் பாடசாலைகளில் கைதொலைப்பேசி பாவணையை தடை செய்வதற்கு சில ஆலோசணைகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயமாகது டென்மார் போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான ஒரு நிலைப்பாடு ஜெர்மனியிலும் நடைமுறைப்படுத்த கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
பாடசாலை மாணவர்கள் கையடக்க தொலைபேசிகளை பாடசாலைக்கு எடுத்து செல்வது அதிகரித்து வரும் நிலையில், அதிரடி கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. பாடசாலை மாணவர்கள் கல்வியில் கவனத்தை செலுத்துவது குறைவாகவே காணப்படுகின்றது.
மேலும், மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் விதமாகவும் கவன சிதறலை குறைக்கும் விதமாகவும் ஜெர்மனியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் கையடக்க தொலைபேசிகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.