Site icon Tamil News

பங்களாதேஷில் நாளை பொதுத் தேர்தல் : பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

பங்களாதேஷில் நாளைய (07.01) தினம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.  நாட்டின் பிரதம மந்திரி ஷேக் ஹசீனா மீண்டும் போட்டியிடவுள்ளார்.

இந்த தேர்தலில் அவர் வெற்றிப்பெறும் பட்சத்தில், ஐந்தாவது முறையாக பதவியேற்பார்.

கிட்டத்தட்ட 170 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடையும்.

வாக்குப்பதிவு முடிந்ததும் விரைவில் எண்ணும் பணி தொடங்கும். ஆரம்ப முடிவுகள் திங்கட்கிழமைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version