Site icon Tamil News

இலங்கை : நாடாளுமன்ற உறுப்பினராக லக்ஸ்மன் நிபுண ஆராச்சி: வெளியான வர்த்தமானி அறிவித்தல்

தேசிய மக்கள் சக்தியின் (NPP) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சியை பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று கடமைகளைப் பொறுப்பேற்ற அனுரகுமார திஸாநாயக்கவினால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சியின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

2020 பொதுத் தேர்தல் முடிவுகளின்படி NPP யின் விருப்பு வாக்களிப்பில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து அடுத்த இடத்தில் இருந்த லக்ஷ்மன் நிபுன ஆராச்சி பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version