Site icon Tamil News

காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,183 ஆக அதிகரிப்பு

காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் அக்டோபர் 7 முதல் குறைந்தது 34,183 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மற்றும் 77,143 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

அக்டோபரில் இருந்து உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று அமைச்சகம் கூறியுள்ளது, மேலும் ஆயிரக்கணக்கான உடல்கள் பேரழிவிற்குள்ளான பகுதி முழுவதும் இடிபாடுகளுக்கு கீழ் கணக்கிடப்படாமல் இருக்க வாய்ப்புள்ளது.எனவும் தெரிவித்துள்ளது.

Exit mobile version