Site icon Tamil News

தென்னாப்பிரிக்காவில் நச்சுவாயு கசிவு : குறைந்தது 16 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில்  நச்சு வாயு கசிந்ததன் காரணமாக மூன்று குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கு புறநகரில் உள்ள போக்ஸ்பர்க் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஜோகன்னஸ்பர்க்கைச் சுற்றியுள்ள பகுதியில் தங்கம் அதிகளவு கிடைப்பதால் அங்கு சட்டவிரோத சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடும்போது இவ்வாறான வாயுக்கள் வெளியேறியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அத்துடன் நச்சுவாயு தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் முழுமையாகன தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறும் அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாகவும், மீட்பு குழுவினர் குறித்த பகுதியை சென்றடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version