Site icon Tamil News

வவுனியாவில் நீதிபதியின் முன்னிலையில் கஞ்சா போதைப்பொருள் எரிப்பு!

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மேற்பார்வையின் கீழ் 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கபட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது, இன்று (24) காலை வேளையில் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் முடிவுறுத்தபட்ட 12 வழக்குகளில் 300கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா முன்னிலைப்படுத்தப்பட்டது.

வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை பகுதியில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மேற்பார்வையின் கீழ் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் , நீதிமன்ற காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் எரிக்கப்பட்டது.

சுகாதார நிலமைகளை கருத்தில் கொண்டு மக்கள் நடமாட்டம் மற்றும் அருகே வீடுகள் அற்ற பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கஞ்சா எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version