Site icon Tamil News

இலங்கை மக்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்குள் ஊடுருவி தரவுகள் திருடும் கும்பல்

இலங்கையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை ஊடுருவி தரவுகள் உள்ளிட்ட தகவல்களை சீனாவில் உள்ள தரவுக் கிடங்குகளுக்கு அனுப்பும் கும்பல் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஹேக்கர்கள் தங்களுடைய கையடக்கத் தொலைபேசிகளை அணுகி தரவுகளை திருடியதாக அரசாங்க அதிகாரிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் நாற்பது பேர் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒன்லைன் கடன் வழங்கும் மையத்தில் சுமார் 80 இளம்பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த ஒன்லைன் கடன் வழங்கும் நிலையம் 2021 ஆம் ஆண்டு இலங்கையரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு சீன பிரஜைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்போது இதனை நடத்திய சீன பிரஜைகள் ஐவரும் இதனை ஆரம்பித்த இலங்கையர்களும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version