Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் திருடப்பட்ட கார்களுடன் பொலிஸாரின் சிக்கிய கும்பல்

ஆஸ்திரேலியாவில் திருடப்பட்ட இரண்டு கார்களுடன் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்தனர்.

எண்டெவர் ஹில் பகுதியில் இரண்டு கார்களை பொலிஸார் கண்காணித்து பின்தொடர்ந்தனர்.

இரண்டு கார்களும் பல சாலைகளில் அதிவேகமாக இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கார்களை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்கிருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் நால்வர் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நகரில் கார் திருட்டு மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version