Site icon Tamil News

வெளியான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!

2022 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

www.doenets.lk, www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை சுட்டிலக்கத்திணை மாத்திரம் பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு, இம்முறை தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் பயன்படுத்தி பெறுபேறுகளை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, தேர்வில் 278,196 பள்ளி விண்ணப்பதாரர்களும் 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் கலந்து கொண்டனர். மொத்தம் 20,000 ஆசிரியர்களும், 1,100 பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடும் பொறுப்பில் இருந்தனர்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version