Site icon Tamil News

மீண்டும் அதிகரிக்கப்படும் எரிபொருள் விலைகள் : வெளியான அறிவிப்பு!

எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, திங்கள்கிழமை (02.10) மீண்டும் ஒருமுறை திருத்தம் செய்யப்பட உள்ளதாக  மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) கடந்த மாத விலைச்சீர்திருத்தத்தின் போது, விலைச்சூத்திரத்தின்படி எரிபொருள் விலையை கணிசமான தொகையிலிருந்து அதிகரித்தது.

இதற்கிடையில், உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை திருத்தம் குறித்து வரும்  04ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக சந்தையில் நிலவும் தற்போதைய விலையை கருத்தில் கொண்டு, இந்த விலை திருத்தத்தின் போது, உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version