பாரிஸில் உள்ள வெர்சாய்ஸ் அரண்மனையை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்காரணமாக சுற்றுலா தலத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பொதுமக்கள் அந்த பகுதியை தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது குறித்த பகுதியில் இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும் அரண்மையை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளமைக்கான காரணம் வெளியாகவில்லை. அதேநேரம் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புப்படவில்லை என்று மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.