Site icon Tamil News

பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டி : ஆண்களுக்கான ஸ்கேட்போர்டிங் ஒத்திவைப்பு!

பாரிஸில் சீரற்ற வானிலை காரணமாக பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாளில் ஆண்களுக்கான ஸ்கேட்போர்டிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை தொடக்க விழாவின் போது காட்சிப்படுத்தப்பட்ட மோசமான வானிலை தொடர்ந்து அழிவை ஏற்படுத்தியதால், நிகழ்வு திங்கள்கிழமை வரை மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வேர்ல்ட் ஸ்கேட் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ஒரே இரவில் மோசமான வானிலை மற்றும் தொடர்புடைய அனைத்து அமைப்பாளர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து, பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் ஆண்கள் ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்கை ஜூலை 29 திங்கள் வரை ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version