Site icon Tamil News

பிரான்சில் ஐவர் கொடூரமாக படுகொலை: தலைமறைவாக இருந்த தந்தை கைது

தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 33 வயதுடைய நபரை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாரிஸின் வடகிழக்கில் 40 கிமீ தொலைவில் உள்ள மீக்ஸில் உள்ள குடியிருப்பில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் உடல்கள் மீட்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 10 மாதங்கள் முதல் 10 வயதுள்ள நான்கு குழந்தைகளே கொல்லப்பட்டுள்ளனர்.

சிசிடிவி காட்சிகளைப் பின்பற்றி சந்தேக நபரைக் கண்டுபிடித்த போலீசார், இறுதியில் அவரை அருகிலுள்ள செவ்ரானில் உள்ள அவரது தந்தையின் வீட்டில் கைது செய்தனர்.

 

Exit mobile version