Site icon Tamil News

டெக்ஸாஸில் சூறாவளியில் சிக்கி நால்வர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸ் மாநிலத்தில் வீசிய சூறாவளியில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சூறாவளி காற்றுடன் ஆழங்கட்டி மழையும் பொழிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் வேறு யாரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனரா என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் Matador, நகரம் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version