Site icon Tamil News

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற ஐந்து புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு

கால்வாயை கடக்க முயன்ற ஐந்து புலம்பெயர்ந்தோர் பிரெஞ்சு கடற்பகுதியில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சுமார் 70 பேர் ஒரு சிறிய படகில் ஏற முற்பட்டபோது அது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்று பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்த நால்வரும் ஈராக் மற்றும் சிரியாவை சேர்ந்தவர்கள் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

32 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து அருகிலுள்ள உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

வெளிவிவகார அமைச்சர் டேவிட் கேமரூன், இது “இதயத்தை உடைக்கிறது” என்றார்.

Exit mobile version