Site icon Tamil News

சிங்கப்பூரில் பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த வெளிநாட்டவர் – காத்திருக்கும் பிரம்படி

சிங்கப்பூரில் பெண்ணிடம் தகாத சீண்டலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதான வெளிநாட்டு நபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். லோரோங் 18 கெய்லாங் அருகே உள்ள பட்ஜெட் ஒன் ஹோட்டலுக்கு வெளியே கடந்த ஜூன் 8ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

அங்கு பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அன்று நள்ளிரவு 1:25 மணியளவில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆவணங்களுக்கமைய,, இதில் கைதான அந்த சந்தேக நபர் வியட்நாம் நாட்டவர் என தெரியவந்துள்ளது.

35 வயதுமிக்க பெண்ணிடம் தவறான முறையில் செயற்பட்ட அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது பிரம்படி விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

Exit mobile version