Site icon Tamil News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டு பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாகிஸ்தானிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அபுதாபியில் இருந்து சுமார் இரண்டரை கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பாகிஸ்தானிய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
57 வயதான குறித்த சந்தேகநபர் சுற்றுலாப் பயணியாக இலங்கை வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 73.5 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரான பாகிஸ்தானிய பெண், தமது பயணப்பையில் சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாக இலங்கை சுங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய காவல்நிலையத்தின் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version