Site icon Tamil News

இணங்க மறுத்ததால் இளம்பெண் தலையில் கல்லைப் போட்டு கொடூரக் கொலை… வாலிபரின் வெறிச்செயல்!

பாலியல் உறவுக்கு மறுத்த பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொலை செய்த சம்பவம் ராய்ச்சூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாவட்டம், ராய்ச்சூர் மாவட்டம், லிங்கஸ்குரு தாலுகாவில் உள்ள யாரடோனா கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிஜம்மா(35). இவருக்கும், இவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவரைப் பிரிந்து கிரிஜம்மா தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தேவராஜ்(25) என்ற வாலிபக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் அவர்களுக்குள் தகாத உறவாக மாறியது.

இதனால் கிரிஜம்மாவும், தேவராஜீம் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டதுடன், பாலியல் உறவும் வைத்துக் கண்டனர்.நேற்று நள்ளிரவு கிரிஜம்மா வீட்டிற்கு தேவராஜ் வந்துள்ளார. தனது ஆசைக்கு இணங்குமாறு தேவராஜ் அழைத்துள்ளார். ஆனால், கிரிஜம்மா தேவராஜின் ஆசைக்கு இணங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ், கிரிஜம்மாவின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்த லிங்கஸ்குரு காவல் நிலைய பொலிஸார், விரைந்து சென்று கொலை செய்யப்பட்டுக் கிடந்த கிரிஜம்மாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தேவராஜை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version