Site icon Tamil News

சீனாவில் பெண்ணை காப்பாற்றி 80000 யுவான் பரிசு பெற்ற உணவு விநியோகம் செய்யும் நபர்

சீனாவில் உணவு டெலிவரி ரைடர் ஒருவர், நீரில் மூழ்கும் பெண்ணை காப்பாற்ற பாலத்தில் இருந்து 12 மீட்டர் குதித்ததால் ஹீரோவாக புகழப்படுகிறார்.

ஜூன் 13 ஆம் தேதி, வாடிக்கையாளருக்கு உணவை டெலிவரி செய்யும் போது கியான்டாங் ஆற்றில் பெண் போராடுவதை பெங் கிங்லின் பார்த்தபோது இந்த சம்பவம் நடந்தது.

சீன சமூக ஊடக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில், 31 வயது ஆடவர், 12 மீட்டர் உயரமுள்ள பாலத்தின் மீது ஏறி, தண்ணீரில் குதித்து, பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபடுவதைக் காணலாம். அந்தப் பெண்ணை நோக்கி நீந்திச் சென்று அருகில் இருந்த ஏணிக்கு அழைத்துச் சென்றான்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரும், உயிர்காக்கும் படகுகளும் 10 நிமிடங்களில் மீட்புப் பணியை முடித்தன. அந்த பெண் உயிர் பிழைத்து தற்போது மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார்.

பாலத்தின் உயரம் காரணமாக முதலில் பயந்ததாகவும், ஆனால் இறுதியில் தண்ணீரில் குதிக்க முடிவு செய்ததாகவும் குறிப்பிட்டார்.

“இது மிகவும் உயரமாக இருந்தது, என் கால்கள் நடுங்கின. இருப்பினும், நான் குதிக்கவில்லை என்றால், அவள் உயிர் பிழைத்திருக்க முடியாது. உயிரை விட விலைமதிப்பற்ற எதுவும் இல்லை, ”என்று அவர் அளித்த பேட்டியில் கூறினார்.

அவரது துணிச்சலுக்காக ஹாங்சோ காவல்துறை அதிகாரிகள் அவருக்கு ”நல்ல சமாரியன்” பட்டத்தையும் 30,000 யுவான் (ரூ 3,43,180) ரொக்கப் பரிசையும் வழங்கினர்.

அவரது நிறுவனம் அவருக்கு 50,000 யுவான் (RS 5,71,826) ரொக்கப் பரிசையும் இலவசமாக கல்லூரியில் படிக்கும் வாய்ப்பையும் வழங்கியது.

Exit mobile version