Site icon Tamil News

இலங்கையில் உணவுக்காக கடன் படும் குடும்பங்கள்

நாட்டில் உள்ள முப்பத்தொரு இலட்சத்து இருபத்து ஒன்பதாயிரத்து முன்னூறு கடன்பட்ட குடும்பங்களில் ஆறு இலட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து எண்ணூறு குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யக் கடனில் உள்ளனர்.

புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இதனை தெரிவித்துள்ளார்.

மொத்தக் கடனாளி குடும்பங்களில் உணவுக்காகக் கடன் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 22.3 வீதமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

69,7800 குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யக் கடனாளிகளாக உள்ளதாகவும் அதில் இரு இலட்சத்து ஐம்பத்து எட்டாயிரத்து இருநூறு பேர் உள்ளடங்குவதாகவும் பேராசிரியர் கூறினார்.

இதேவேளை, கடனை மீளச் செலுத்துவதற்காக ஏறக்குறைய 370,000 குடும்பங்கள் கடன் பெற்றுள்ளதாகவும், 491000 குடும்பங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்காக கடன் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

53,200 குடும்பங்கள் கட்டிடங்கள் கட்டுவதற்கும் புதுப்பிப்பதற்கும் கடன் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொருளாதார நெருக்கடியின் பின்னர் (2022ஆம் ஆண்டிற்குப் பின்னர்) 688,000 குடும்பங்கள் கடனாளிகளாக மாறியுள்ளதாகத் தெரிவித்த பேராசிரியர், பெரும்பாலானோர் அடமானச் செயற்பாடுகள் மூலம் கடன் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

அடமான முறையில் கடன் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 9,70,000 என்று அவர் கூறினார்.

இது தவிர வங்கிகளில் 97000 குடும்பங்களும், நிதி நிறுவனங்களில் 272250 குடும்பங்களும், பண தரகர்களிடம் 303500 குடும்பங்களும் கடன் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version