Site icon Tamil News

மெக்சிகோவை உலுக்கிய வெள்ளம் – குடியிருப்புகளில் புகுந்த 200 முதலைகள்

மெக்சிகோவின் அடுத்தடுத்து வீசிய ஆல்பர்ட்டோ மற்றும் பெரில் புயல்களால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

பெய்த கனமழை காரணமாக தமோலிபஸ் நகருக்குள் புகுந்த வெள்ளத்தோடு சேர்ந்து 200-க்கும் மேற்பட்ட முதலைகள் படையெடுத்துள்ளன.

குடியிருப்புகளில் முதலை நுழைந்ததாக வந்த புகார்களின் பேரில் உடனுக்குடன் முதலைகளை பிடித்து காட்டிற்குள் விட்டதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

இன்னும் சில வாரங்களுக்கு விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் பிரச்சனை நீடிக்க வாய்ப்புள்ளதாக மெக்சிகோ சிட்டி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 

Exit mobile version