Site icon Tamil News

பங்களாதேஷில் வெள்ளத்தால் உயிரிழந்த மக்கள் : இந்தியாவிற்கும் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

பங்களாதேஷின் கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வசித்த மக்களை மீட்க மீட்பு பணியாளர்கள் போராடிய நிலையில், அது கைக்கூடாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதிகளில் சிக்கித் தவித்த 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதன் கிழமை முதல் வங்கதேச எல்லையை ஒட்டிய இந்தியாவின் வடகிழக்கு திரிபுரா மாநிலத்தை வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் அழித்ததால் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து குறித்த மழையின் தாக்கம் இந்தியாவிலும் நீட்டிக்கும் என்பதால் இந்தியாவின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version