Site icon Tamil News

பாகிஸ்தான் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள பல பகுதிகள் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளக்கூடும் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பருவமழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதே இதற்கு காரணம் ஆகும்.

இதுபோன்ற கனமழை பெய்தால், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர், குஜ்ரன்வாலா மற்றும் லாகூர் ஆகிய நகரங்களில் உள்ள மக்கள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என்பதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கனமழை காரணமாக, கைபர் பக்துன்க்வாவின் மலைப் பகுதிகளும் நிலச்சரிவை எதிர்கொள்ளும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனால் கடந்த அக்டோபரில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முடியாமல் பாகிஸ்தான் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

அந்த வெள்ளத்தால் பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சேதம் 3.2 டிரில்லியன் ரூபாய் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை 1800 ஐ நெருங்குகிறது.

Exit mobile version