Site icon Tamil News

பிரித்தானியாவில் 40 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பிரித்தானியர்கள் பாரிய மழை மற்றும் வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளனர்.

மத்திய மற்றும் வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு எதிர்பார்க்கப்படும் நிலையில்  சுற்றுச்சூழல் நிறுவனம் இங்கிலாந்து முழுவதும் 40க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

இதன்காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இருந்த பள்ளிகள் மூடப்பட்டுள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது.

மிட்லாண்ட்ஸ், ஆக்ஸ்ஃபோர்ட்ஷையர் மற்றும் கிழக்கு ஆங்கிலியாவின் சில பகுதிகளுக்கு வானிலை அலுவலகம் அம்பர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

Exit mobile version