Site icon Tamil News

லண்டன் நோக்கி வந்த விமானத்தில் விமானப் பணி பெண் மீது கொடூர தாக்குதல்

லண்டன் – பயணி ஒருவர் விமானத்தின் கழிவறையை சேதப்படுத்திவிட்டு விமானப் பணிப்பெண்ணின் முகத்தை அடித்து நொறுக்கினார்.

பாங்காக்கில் இருந்து ஹீத்ரோவுக்கு சென்ற தாய் ஏர்வேஸ் விமானத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 35 வயதான அந்த நபர் விமானப் பணிப்பெண்ணை அடித்து தரையில் தள்ளினார்.

அதிர்ச்சியடைந்த மற்றைய பயணி தாக்கியவரைத் தடுக்க முயன்றும் அவரை அடக்க முடியவில்லை. இந்த காட்சியை சில இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த இளம்பெண் ஒருவர் மொபைல் கேமராவில் படம் பிடித்துள்ளார்.

விமானப் பணிப்பெண்ணின் மூக்கை உடைத்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார். வன்முறை தொடர்ந்தால் விமானம் துபாய்க்கு திருப்பி விடப்படும் என குழுவினர் எச்சரித்துள்ளனர்.

இரண்டு பயணிகள் தாக்கியவரின் கைகளைக் கட்டியபோது அவர் அமைதியடைந்தார்.

அப்போது அவர் தகாத வார்த்தைகளால் திட்டினார். லண்டனில் தரையிறங்கிய அவர் பின்னர் கைது செய்யப்பட்டார். காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Exit mobile version