Site icon Tamil News

இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் ஐவர் உயிரிழப்பு!

இலங்கையின் பல்வேறு  பகுதிகளில் இடம்பெற்ற சாலை விபத்துகளில் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி அம்பிலிபிட்டிய, கலகெதர, வாகரே டிக்வெல்ல மற்றும் அக்கராயன்குளம் ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பிலிபிட்டிய மித்தெனிய வீதியில் தபால் 06க்கு அருகில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பஸ் தரிப்பிடத்தில் மோதிய விபத்தில் சாரதி உயிரிழந்துள்ளதுடன் பெண் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார்.

கலகெதர, கந்தகும்புர பிரதேசத்தில் கெப் வண்டியின் பின்புறத்தில் நாற்காலியுடன் பயணித்த நபர் ஒருவர் வளைந்த வீதியில் கெப் வண்டியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகரை பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் 20 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், அக்கராயமன்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கெப் வண்டி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, டிக்வெல்ல நகருக்கு அருகில் வீதியைக் கடந்த 84 வயதுடைய பெண் ஒருவர் காரில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Exit mobile version