Site icon Tamil News

பித்தானியாவுக்கு சென்று ஐந்து மாதங்களில் ஈழத்து குடும்பப் பெண் உயிரிழப்பு

திருமணம் செய்து இரண்டு வருடமான நிலையில் பிரித்தானியாவுக்கு சென்று ஐந்து மாதங்களில் முல்லைத்தீவை சேர்ந்த குடும்பப் பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது , கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் குறித்த பெண் திருமணம்செய்துள்ளார். இந்நிலையில் ,கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் கணவருடன் வசிப்பதற்காக பிரித்தானியா சென்றுள்ளார்.

இதன்போது இரண்டு மாதக் கர்ப்பிணியாக இருந்த போது கருச்சிதைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது .

இதற்கு சிகிச்சை பெற்ற குறித்த பெண் சில தினங்களுக்கு முன் வீட்டில் தனிமையில் இருந்த போது மாயங்கி விழ்ந்து உயிரிழந்ததாக கூறப்படுகின்றது . இச் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version