Site icon Tamil News

கிளிநொச்சியில் துப்பாகிச் சூடு – ஒருவர் படுகாயம்

மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடாத்தியதில் , நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். டிப்பரில் இருந்த மேலும் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பூநகரி பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் வந்த டிப்பர் வாகனத்தினை மறித்த வேளை , வாகனத்தினை நிறுத்தாது , பொலிசாரை மோதி தள்ளும் விதமாக வாகனத்தை சாரதி செலுத்தியுள்ளார்.

உடனே சுதாகரித்துக்கொண்ட பொலிஸார் டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதன் போது சாரதிக்கு உதவியாக செயற்பட்ட கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த இளைஞனை மீட்டு , வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார் , டிப்பர் சாரதியையும் மேலும் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version