Site icon Tamil News

அதுருகிரியில் துப்பாக்கிச் சூடு – தப்பியோடிய வேன் மீட்பு

அத்துருகிரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய வேன் ஒன்று புலத்சிங்கள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (08) மாலை 6.15 மணியளவில் 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் புலத்சிங்கல, அயகம, டெல்மெல்ல பிரதேசத்தில் வெறிச்சோடிய காணி ஒன்றில் வேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அயகமவில் இருந்து புலத்சிங்கள நோக்கி வேன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த வேனில் முன் மற்றும் பின் இலக்கத் தகடுகள் இல்லை எனவும், வருமான அனுமதிப் பத்திரத்தின் பிரதி ஒன்றும் முன் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (08) காலை 10 மணியளவில் அத்துருகிரி நகரில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அழகு நிலையம் திறப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

பிரபல வர்த்தகரான 55 வயதான சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்தா மற்றும் 38 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் கொழும்பு 07 மற்றும் அதுருகிரிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாடகர் கே.சுஜீவாவும் காயமடைந்துள்ளார், மேலும் இரு பெண்களும் ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

Exit mobile version