Site icon Tamil News

அம்பாறையில் துப்பாக்கி சூடு – பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட நால்வர் பலி

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் நாமல் ஓயா பகுதியில் உள்ள கராண்டுகல உப பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரினால் இத்துப்பாக்கிச் சூடு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்கினியாகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சக பொலிஸ் உத்தியோகத்தரை சுட்டு படுகொலை செய்த பின்னர் இங்கினியாகல நெல்லியத்த பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து மனைவி மற்றும் மகள் ஆகியோரை சுட்டுக்கொன்ற பின்னர் தனது துப்பாக்கியினால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் குடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்றுள்ளதா அல்லது இதர காரணங்களினால் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version