Site icon Tamil News

பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கு இடையில் துப்பாக்கிச்சூடு : பொதுமக்கள் பலி!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று தலிபான் செய்தி தொடர்பாளர் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாட்டு எல்லையில் அமைந்துள்ள டோர்காம் பகுதியில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூவர் காயமடைந்தனர்.

Exit mobile version