ஈராக் திருமண மண்டபத்தில் 100க்கு அதிகமானோரின் உயிரை பறித்த தீ விபத்து தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருமண மண்டப உரிமையாளர், ஊழியர்கள் ஆகியோரும் அவர்களில் அடங்குவர் என செய்தி வெளியாகியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக 3 நாள் தேசியத் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பிரதமர் முகமது ஷியா அல் சுடானி (Mohamed Shia al-Sudani) அறிவித்தார்.
திருமண விழாவின் போது நடந்த வாணவேடிக்கையால் தீ விபத்து ஏற்பட்டது. விருந்தினர்கள் நிரம்பியிருந்த மண்டபத்தை நெருப்பு சூழ்ந்தது.
எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் மண்டபத்தில் நிறைந்திருந்தன. அது பாதுகாப்பு விதிகளுக்கு முரணானது என்று ஈராக் குடிமைத் தற்காப்பு இயக்குநர் அலுவலகம் கூறியது.