Site icon Tamil News

சிங்கப்பூர் கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

சிங்கப்பூரில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேற்கு சிங்கப்பூர் துறைமுகப் பகுதியில் உள்ள Seraya Buoy பகுதியில் இருந்தகப்பலே இவ்வாறு தீவிபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனை அடுத்து, ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த திங்கள்கிழமை மதியம் 1.20 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

PSA மரைன் பைலட் கப்பலின் இயந்திர அறையில் தீ பற்றியதாக PSA Marine அமைப்பு தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் பரவி வரும் 59 வினாடிகள் கொண்ட வீடியோவில், அந்த கப்பலில் பற்றி எரியும் தீப்பிழம்புகள் மற்றும் கறுப்பு நிற புகை மூட்டங்களையும் காண முடிந்தது.

புகையை உள்ளிழுத்த காரணத்திற்காக ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக SCDF கூறியது.

தீ விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது.

Exit mobile version