Site icon Tamil News

பாகிஸ்தானில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து : 09 பேர் பலி!

பாகிஸ்தானின் தெற்கு நகரமான கராச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று (25.11) ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரத்தில் உள்ள பல மாடி RJ ஷாப்பிங் மாலில் அதிகாலையில் தீப்பிடித்ததாகவும், தீயணைப்புப் படையினர் சுமார் 50 பேரைக் காப்பாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்னும் அதிகமானோர் கட்டிடத்திற்குள் இருந்ததாக உள்ளூர் ஒளிபரப்பு ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீ விபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version