Site icon Tamil News

தென் கொரியாவில் 09 மாடிகளை கொண்ட கட்டடத்தில் தீ விபத்து : 07 பேர் உயிரிழப்பு!

தென் கொரியாவின் புச்சியோன் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 07 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக புச்சியோனின் பொது சுகாதாரத் துறையின் இயக்குனர் கிம் இன்-ஜே தெரிவித்துள்ளார்.

ஒன்பது மாடிகள் கொண்ட ஹோட்டலில் 23 விருந்தினர்கள் இருந்ததாக புச்சியோன் தீயணைப்பு நிலையத்தின் அதிகாரி லீ சாங்-டான் தெரிவித்தார்.

தற்போது தீ முற்றாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version