Site icon Tamil News

நிதி பிரச்சினை – பாகிஸ்தானில் மனைவி மற்றும் குழந்தைகளை கொன்ற நபர்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வறுமையில் வாடும் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் 7 குழந்தைகளை வெட்டிக் கொன்ற கொடூரமான சம்பவம் பதிவாகியுள்ளது.

சஜ்ஜத் கோகர் ஒரு தொழிலாளி, அவரது 42 வயதான மனைவி கவுசர் மற்றும் அவர்களது ஏழு குழந்தைகள்,நான்கு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள், எட்டு மாதங்கள் முதல் 10 வயது வரை கோடரியால் தாக்கி, அவர்கள் அனைவரையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் நிதி பிரச்சினையில் மன உளைச்சலில் இருந்ததாகவும், அடிக்கடி தனது மனைவியுடன் சண்டையிடுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அந்த நபர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாத காரணத்தினால் இவ்வாறு செய்ததாக சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதல்வர் மரியம் நவாஸ் கொலைகள் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்ததுடன், காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை கோரினார்.

Exit mobile version