Site icon Tamil News

இலங்கை – யாழ் சிறைச்சாலையில் உயிரிழந்த பெண் கைதி : விசாரணைகளை தீவிரப்படுத்திய பொலிஸார்!

யாழ்.சிறைச்சாலையின் 42 வயது கைதி ஒருவர் அவசர மருத்துவ சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக யாழ்.பொலிசார் அறிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் வட்டக்கச்சி பகுதியில் வசித்து வந்த புஷ்பா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரியபண்டார மேலதிக விசாரணைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சாம்லி பலிஹேன, யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் பரிசோதகர் இந்திக்க அபேகுணசேகர ஆகியோரின் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Exit mobile version