Site icon Tamil News

சிங்கப்பூரில் பிள்ளைகளுக்கு தந்தை செய்த கொடூரம் – நீதிமன்றத்தில் அதிரடி உத்தரவு

சிங்கப்பூரில் இளம் பிள்ளைகள் இருவரின் மண்டையை உடைத்ததன் தந்தை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செயல் தொடர்பில் விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்கக் கேட்டுச் சமர்ப்பிக்கப்பட்ட நபர் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

6 பிள்ளைகளுக்குத் தந்தையான 35 வயது நபர் தம்முடைய 2 மாதப் பெண் குழந்தையையும் 2 வயது மகனையும் வெவ்வேறு சம்பவங்களில் தாக்கினார்.

2018ஆம் ஆண்டு அவர் பெண் குழந்தையை வலுவாகக் குலுக்கியதால் அதன் மண்டையோட்டிலும் விலா எலும்புகளிலும் முறிவு ஏற்பட்டது. நபர் குழந்தைக்கு எப்படி அடிபட்டது என்பதை மூடி மறைத்தார். குழந்தை பின்னர் வளர்ப்புப் பெற்றோரின் கவனிப்பில் விடப்பட்டது.

2021ஆம் ஆண்டு மகனைப் பலமுறை கீழே தள்ளிவிட்டதால் மகனுக்கு வலிப்பு ஏற்பட்டது. மகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த நபவருக்குக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆண்டுகள் 4 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவருக்கு 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டிருந்தன. அவர் தண்டனைக்கு எதிராக செய்த மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அவருக்குக் குறைவான தண்டனையே விதிக்கப்பட்டிருப்பதாக அது சொன்னது.

Exit mobile version