Site icon Tamil News

பாகிஸ்தானில் மனைவி உள்பட 7 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த தந்தை!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் , வறுமையில் வாடும் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் ஏழு  குழந்தைகளை கோடாரியால் வெட்டிக் கொன்றதாகக் போலீசார் தெரிவித்தனர்.

தொழிலாளியான சஜ்ஜத் கோகர், தனது மனைவி கவுசர், 42, மற்றும் எட்டு மாதங்கள் முதல் 10 வயது வரை உள்ள நான்கு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் ஆகிய ஏழு குழந்தைகளை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் நிதிப் பிரச்சினையில் மன உளைச்சலில் இருந்ததாகவும், மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

அந்த நபர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனது பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாத காரணத்தினால் தான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொண்டதாக சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ், அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்ததோடு, காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை கேட்டுள்ளார்.

Exit mobile version